June 27, 2013

அவினாசிலிங்கம்!

என்னைவிட ஒரு வயது சிறியவர். ஆனால் நான் அவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் பத்திரிக்கையாளனாக அடியெடுத்து வைத்ததிலிருந்தே அண்ணா என்று அழைத்து வந்தேன். அவரது கொள்கை, கோட்பாடுகளில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு... ஆனால் அது என்றுமே எங்களது நட்புக்கு இடையூறாக இருந்ததில்லை. பத்திரிக்கை உலகில் 21 ஆண்டுகாலம் பணியாற்றியவர். தான் பணிபுரிந்த நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றிய போதும் சரி.... பதவி உயர்வு பெற்று நல்ல சம்பளம் பெற்ற போதும் சரி... என்றுமே நேர்மை தவறாத உன்னத பத்திரிக்கையாளர். பெயரை குறிப்பிடாமல் அவரைப்பற்றியே ஒரு நாள் நான் செய்தி எழுதவேண்டி வந்தது. ‘வேலு... என்னை பற்றி எழுதிய செய்தியில் நீ பயன்படுத்திய வார்த்தை சரியில்லை....’ என்று கூறி அதற்கு பொறுத்தமான வார்த்தையையும் கூறினார். பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிட்டதை அவர் விரும்பவில்லை... ஆனால் எனக்கே ஓட்டு போட்ட அவர், பின்னர் ஒரு ஆண்டுகால வெற்றிகரமான என் பணிக்கு பின்னணியில் அவரும் இருந்தார். அவருடன் நெருக்கமாக இருந்த சக நண்பர்களுக்கு எங்கள் நெருக்கமான பழக்கம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு சகோதர உறவை தாண்டி பழகினோம். அதனால் தானோ என்னவோ என்னால் அவரது பிரிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. பத்திரிக்கையாளர்கள்.... சமூகம்... பத்திரிக்கையாளர் சங்கம் என்று அவர் பல துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார்... ஆனால் ஏனோ அவற்றையெல்லாம் பாதியிலேயே விட்டுவிட்டார்.. வாழ்க்கையையும் பாதியிலேயே முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை....

38 வயதில் அவரது மரணம் ஒரு விபத்து... கண்முன்னே நடந்த விபத்தை தடுக்க முடியாத பாவிகளில் நானும் ஒருவன் என்று நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!

3 comments:

Om Prakash said...

Terribly, Terribly shocking to know. May his soul rest in peace. - Om Prakash (Ex.PRO/PGT RLy)

Om Prakash said...

Terribly, Terribly shocking to know. May his soul rest in peace.

Arun said...

அவினாசி-இந்த பெயருக்கு எத்தனை அர்த்தங்கள்..........அண்ணனாகவும் உற்ற நண்பனாகவும் ஆசானாகவும் இருந்த ஒரு உன்னத மனிதனை இழந்து விட்டு தவிக்கிறது கோவை மாவட்ட ஊடகத்துறை.....................அண்ணன் அவினாசியின் உயிர் மட்டுமே பிரிந்துள்ளது .........அவரது நினைவுகள் என்றும் நம்மை விட்டு பிரியாது ...........அண்ணன் இருந்த அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அவது இடம் என்றும் வெற்றிடமே..............