February 17, 2014

நம்ம ஊர் பரவாயில்லை!


         த்திரிக்கையாளர் என்றாலே ஒரு கவுரவம் இருந்த காலம் போயே போச்சு... பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கொடுக்கும் அன்பளிப்புகளை பெறுவதற்கு போலி பத்திரிக்கையாளர்களுடன் பத்திரிக்கைகளில் உண்மையாகவே வேலை செய்யும் சிலரும் போட்டிபோடுவது மனதில் வலி உண்டாக்கும். இந்த அவலம் என்றாவது சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருந்ததுண்டு... ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இருக்கிறது நண்பர் விஜயின் டெல்லி அனுபவம். டில்லியில் நடந்த வாகன கண்காட்சி தொடர்பான செய்திக்காக நண்பர் விஜய் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அவர் எடுத்திருந்த ஆயிரக்கணக்கான படங்களில் டில்லி பத்திரிக்கையாளர்கள் அன்பளிப்புகளை வாங்க முண்டியடிப்பதும் சில இருந்தன. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே ஒரு நிறுவனம் அளித்த அன்பளிப்பு பையை பெறுவதற்கு பத்திரிக்கையாளர்கள் முண்டியடிப்பதை பார்த்தால் நம்ம ஊர் பரவாயில்லை என்று தெரிகிறது...

1 comment:

Lets Travel For Food said...

Sir vanakam....ph 8695776365....ungaloda post la patha romba impressed ah irunthathu...ungakitta mukkiyama solla virumbara athuku neenga tha bathil sollamudiyu...unga call kaga wait panra