August 3, 2010

அதிமுகவா, திமுகாவா?

செம்மொழி மாநாடும் அதைத்தொடர்ந்து அதிமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம், அதில் கூடிய கூட்டம், அதற்கு போட்டியாக திமுக நடத்திய பொதுக்கூட்டம், அதன் எதிரொலிகள் போன்றவை சமீபகால கோவை பத்திரிக்கை உலகின் ஹாட் டாபிக்குகளாக இருந்தது. செம்மொழி மாநாட்டிற்கு கூடிய கூட்டம் தங்களுக்கு ஓட்டாக குவியும் என்று திமுக எதிர்பார்த்ததோ இல்லையோ அதிமுக வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தியது உண்மை. அதனால் தான் அவசர அவசரமாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 13 ம் தேதி கண்டன கூட்டம் நடந்தது. இதில் ஜெயலலிதாவே எதிர்பார்க்காத அளவிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்தனர். இது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழவதும் அதிமுகவிற்கு எழுச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த ஜெயலலிதா களம் இறங்கிவிட்டார். கோவையில் கூடிய கூட்டத்தை அறிந்த ராகுல்காந்தி, அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் எண்ணத்திற்கு வந்துவிட்டதாக த
கவல்கள் பரவின. இதனால் அவசர அவசரமாக அதிமுகவிற்கு போட்டியாக திமுகவும் பொதுக்கூட்டம் ஒன்றை (நேற்று 2.8.2010 அன்று) அதே வ.உ.சி. பூங்காவில் நடத்தியது. ஆனால் பலன்தான் எதிர்மறையாக போய்விட்டது. அதிமுக கூட்டத்திற்கு குறைந்தது 2 லட்சம் பேர் வந்திருப்பார்கள். ஆனால் திமுக கூட்டத்திற்கோ 60 ஆயிரத்திற்கு மேல் இல்லை. ஜெயலலிதா பேசும் போது ஒட்டுமொத்த கூட்டமும் மைதானத்திற்குள் வர முண்டியடித்தால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கருணாநிதி பேசும் போது பாதி மைதானம் காலியாகிவிட்டிருந்தது. ஜெயலலி
தா கண்டன கூட்டத்தில் மைதானம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்து நின்றிருந்ததோடு, அவினாசிரோடு, ஸ்டேடியம் ரோடு என்று மைதானத்தை சுற்றி அனைத்து பகுதிகளிலும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது. திமுக கூட்டத்தில் நடுரோட்டில் டிஜிட்டல் போர்டு வைத்து பொதுக்கூட்டத்தை ஒளிப்பரப்பி ரோடு எங்கும் மக்கள் வெள்ளம் இருப்பது போல காட்ட முயன்று தோற்றார்கள். திமுக கூட்டத்திற்கு கூட்டம் வராததற்கு திமுகவில் நடக்கும் உட்கட்சிபூசல், விலைவாசி உயர்வால் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புபோன்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால்
முதல்வர் கருணாநிதியோ பத்திரிக்கைகள் மீது வெறுப்பை உமிழ்ந்து பேசுகிறார்.

No comments: