June 11, 2010

நிருபருக்கு பத்து அல்லது பதினைந்து சதவீதம்

கௌரவம் கட்டுரையை படித்துவிட்டு சக நிருபர் ஒருவர் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும், ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதை உங்கள் பார்வைக்கு இங்கே வெளியிட்டுள்ளேன்.. பத்திரிக்கையாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் நடந்து கொண்டவிதம் குறித்த தங்கள் மடலைக் கண்டேன்.மிரட்டலின் மூலம் மட்டுமே மரியாதையைப் பெற்றுக் கொள்வது-அல்லது.பறித்துக் கொள்வது என்பது சில பத்திரிக்கையாளர்களின் வாடிக்கையாக உள்ளது என்பது வேதனையளிக்கிறது. ஆனால்,இன்னும் சில பத்திரிக்கையாளர்கள் இதைவிட மோசம்..மரியாதையைப் பெறுவதற்காக மிரட்டுவது என்பது மட்டுமல்ல,மாமூலைப் பெறுவதற்காகக் கூட,மிரட்டுகிறார்கள் என்பதும் நடைமுறையில் உள்ளது. சாட்சிக்காக இத்துடன் ஒரு ஆடியோவை அனுப்பியுள்ளேன்.கேட்டுவிட்டு அதிர்ச்சியடையுங்கள் அல்லது வேதனைப்படுங்கள்..,அதோடு நிற்காமல் இது குறித்த உங்கள் கருத்துக்களை தங்கள் வலைப்பூவில் கடுமையாக பதிவு செய்யுங்கள். உரையாடலின் மேலோட்டமான விபரம்., பொள்ளாச்சியிலுள்ள அனைத்துக் காவல்நிலையங்களிலும்,மாதமானால் ஒன் டீ-அதாவது ஒரு ஆயிரம் ரூபாய் தந்துவிடுகிறார்களாம்.ஆனால் பெரிய அளவில்,திருட்டுப்போன நகைகள் அல்லது பொருட்களைப் போலீசார் கண்டுபிடித்து,அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கும்போது,குறிப்பிட்ட சதவீதம் பொருளாகவோ,பணமாகவோ,போலீசார் எடுத்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளமாகவும்,அதிலிருந்து ............... நாளிதழ் நிருபருக்கு பத்து அல்லது பதினைந்து சதவீதம் மாமூல் தரவேண்டுமாம்.காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை ஏ.டி.எம்.மிலிருந்து எடுத்துதரச் சொல்லவில்லையாம் அந்த நிருபர்.போலீசாரின் மீதுள்ள கருணையால்,அள்ளித்தரவேண்டாம் கிள்ளித்தாருங்கள் என்று கேட்கிறார்.அது வேண்டுகோளா..? அல்லது மிரட்டலா..,,? என்று இதற்குப்பின் நடைபெற்ற உரையாடலின் துணையோடுதான் கண்டுபிடிக்கமுடியும். வேண்டுகோள்..! போலீசார்தான் மாமூல் வாங்குவது வாடிக்கையான ஒன்று.ஆனால் போலீசாரிடமே மாமூல் வாங்குவது என்பது..அடேங்கப்பா..நினைத்துப்பார்த்தால்,திகைப்பாக இருக்கிறது. இதனைக்கேட்டு விட்டு,பிரபல பத்திரிக்கையின் பொள்ளாச்சி நிருபர் ..................இங்குள்ள சப்இன்ஸ்பெக்டர் .................என்பவரோடு நடத்திய உரையாடலை-பெயரைக்குறிப்பிடாமல்,பூடகமாக-செய்தியாக வெளியிட்டாலும் சரி. கிருமிகளை ஒழிப்பதை கூடுமானவரை நாமும் செய்யவேண்டும் என்பதே எனது ஆவல். அன்புடன்.....********** ........................

1 comment:

gopalsamy said...

thappu seipavarkal dhandikka padavendum. athai vida karanamanavarkalukku athika patcha thandanai kodukka pada vendum. tholurikkap pada vendum