June 23, 2010

இன்று துவங்குகிறது... என்று தீரும்?

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தானும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திவிட வேண்டும் என்று முயற்சித்து, அறிவித்து....ஈழத்தில் லட்சக்கணக்கானோர் பலியாகி, பலர் முள்வேலி முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் போது தமிழ் மாநாடா என்று எதிர்ப்புகள் கிளம்பியதால் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துகிறார் கருணாநிதி.இந்த மாநாட்டில் தமிழுக்கு பலன் இருக்காது, கருணாநிதியின் புகழ்பாடுதல் தான் நடக்கும் என்று மாநாட்டு எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனாலும் அவசர கதியில் கோவை கொஞ்சம் அழகூட்டப்பட்டிருக்கிறது என்பது உண்மை. தரத்தைப் பற்றி சிந்திக்காவிட்டால் அடுத்த மழை வரும் வரை கோவையின் முக்கிய சாலைகள் பளபளக்கும்.... "பிளாட்பாரங்களில் டைல்ஸ்' ஒட்டிக்கொண்டிருக்கும். மாநாடு முடியும் வரை வர்த்தக நிறுவனங்களின் ஆங்கில பெயர் பலகைகளின் மீது தற்காலிகமாக ஒட்டப்பட்டுள்ள தமிழ் நிற்கும்.ஆனால்....* தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காது என்ற நிலை மாறும் நாள் எந்நாள்?* பனிரெண்டாவது படித்த மாணவனுக்கு தவறில்லாமல் தமிழ் எழுதப்படிக்கத் தெரியவில்லையே... இந்த இழிநிலை மாறும் நாள் எந்நாள்?*தமிழ் வாழ்க என்று கோஷம் போடும் தலைவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் கொலைக்கு எப்போது தடை வரும்?* தலைவர்களின் வாரிசுகள் எப்போது தமிழ் வழிக்கல்வி பயிலுவார்கள்?* தமிழர்களின் வரிப்பணத்தை விரயமாக்கி, தமிழ் மாநாட்டு பணிகளில் கூட ஊழல் புரியும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் இன்னொரு முகத்தினை அப்பாவி தமிழன் என்றுணர்வான்?இன்னும் எத்தனையோ கேள்விகள் என் மனதில் எழுந்தவண்ணம் உள்ளது. இதற்கு யார் பதில் உரைப்பார்!

No comments: