June 10, 2010

கௌரவம்!

கோவையில் இன்று(10.6.2010) நடந்த பத்திரிக்கையாளர்கள் தொடர்பான இரு வேறு சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன். சம்பவம் 1.:கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செம்மொழி மாநாடு விருந்தோம்பல் குழுவின் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் ..வேலு தலைமையில் நடந்தது. 5 நிமிடம் போட்டோ எடுக்க மட்டும் வந்தால் போதும் என்று பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. போட்டோ எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் பணியை முடித்து அரங்கை விட்டு வெளியேறும் போது கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு வழங்க டீஸ்னேக்ஸ் தயாராக இருந்தது. சில பத்திரிக்கையாளர்கள் ஆர்வத்துடன் டீ குடிக்க (அழைக்காமலேயே) சென்றனர். அங்கிருந்தவர்களோ உங்களுக்கு டீ கிடையாது என்று முகத்தில் அடித்தாற்போல கூறி விரட்ட டீ விரும்பிய பத்திரிக்கையாளர்கள் முகத்தில் ஆடவில்லை. இதைப்பார்த்த உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து அழைத்துச்சென்று நிலமையை சமாளித்தார். சம்பவம் 2.:கோவை புறநகர் மாவட்ட காவல் நிலையம் ஒன்றிற்கு பிரபல வாரப்பத்திரிக்கைகளைச் சேர்ந்த இரண்டு நிருபர்கள் சென்றனர். அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் இருவரையும் அழைத்து அன்புடன் அமரவைத்து பேசினார். ஏனோ அவசர அவசரமாக இரு நிருபர்களும் வெளியே கிளம்பி சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற இரண்டாவது நிமிடத்தில் சப்இன்ஸ்பெக்டரின் செல்போன் அலறியது. அதில் பேசியவர் சற்று முன் வந்து சென்ற நிருபர்களில் ஒருவர். "யோவ்.... நீ என்ன பெரிய .ஜியா? முன்னணி பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர்கள் வந்திருக்கோம். உட்கார்ந்துகிட்டே கை குலுக்குற.... எங்களைப்பத்தி உனக்குத் தெரியுமா? ஐஜி கிட்ட பேசி உன்னை உண்டு இல்லைனு செஞ்சுடுவோம்....' நிருபர்களின் இந்த அதிரடி எஸ்ஐயை கலங்க வைத்துவிட்டது. தான் செய்தது தவறா சரியா என்றும் கூட தெரியாமல், .ஜி தன் மீது எடுக்கும் நடவடிக்கை குறித்தே அவரது கவலை இருக்கிறது. மேற்காணும் சம்பவங்களில் இருந்து இரண்டு கேள்விகள் எனக்கு எழுகிறது.... கவுரவம், மரியாதை என்பது நமது நடத்தையின் மூலம் கிடைப்பதா அல்லது மிரட்டி பெறுவதா?

1 comment:

பாரதப்ரியன் said...

This article and its proofs shows how the current status of journalism which is proudly called as fourth pillar of democracy. You never find professional ethics even from the big and famous journalists. They have filled with full of ego and selfishness not with nationalism. Only solution for this type and all type of corruption is the revolution from the common man like a lava from the volcano.