June 4, 2010

மன்னிப்புக் கேள்

எழுத்தாளர் சாரு நிவேதிதா; 'நீயா நானா' கோபிநாத் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனியால் தான் எப்படி அவமானப்பட்டேன் என்பது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை............
மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயாநானாநிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும்புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன். இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள்தேவையாஇல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும்தெரியாது. இத்தலைப்பின் உள்குத்துஎன்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றிஒரு டாக் ஷோ செய்ய வேண்டும்என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டுமாங்காய் அடிக்கநினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரானஆண்டனி. இதைஅந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான்என்னால் உணரமுடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீதுஇருந்த பகையை இந்தநிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது. கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயாநானாநிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும்கொடுக்கவில்லை. இதுபற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழிவாங்கும்நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில்என்னிடம்கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத்பிரதர்ஸின்இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னைமடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால்என்னால்அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை. என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயேநண்பர்கள்என்னை ட்யூப் லைட் என்பார்கள். நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும்கோபிநாத்தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்றுகவனித்தால்தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கிசெருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும்ஆண்டனியின் கேள்விக்கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான்கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒருபொம்மைதான். அதைஇயக்குபவர் ஆண்டனி. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாககெரில்லாத்தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்துவிழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள்என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின்பின்னால்போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசைதிருப்பியதற்காகவருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான்ஆமாம்என்றேன். விடாமல் தொடர்ந்துஅதற்காக உங்கள் வாசகர்களிடம்மன்னிப்பு கேட்டுக்கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான்என்னதவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியேபுரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவாமன்னிப்புக்கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான்என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக்கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம்பிரம்மச்சரியத்தைபோதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்துகொண்டார் என்றகாரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின்பார்ட்னரா? எனக்கும்அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது? ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான்நித்யானந்தாவை நம்பிஏமாந்தகதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாகஎழுதிக்கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால்கோபிநாத்மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டுஎன்னைமுட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒருகொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத்தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இதுசம்பந்தமாக என்வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கானமின்னஞ்சல்கள் வந்துள்ளன. பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்றவார்த்தையைப்பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின்மற்றொருவிருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னைஅடித்தார்கள். பவா ஒருகம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடுசேர்ந்து கொண்டு நான்வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார். ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அதுஉண்மையாகிவிடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம்செய்துகொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம்செய்துகொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்துவிடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிகவெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும்என்றுநினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்கவேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத்தோன்றும். அதனால்நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான்நம்புவேன். அதுவும்ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வதுஎப்படிப் பொய்யாகஇருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித்திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன். இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியஅவசியம்எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்திஅல்லவாஎங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்? உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில்நக்சல்பாரிஇயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான்என்பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்குமுன்புஉலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில்கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம். பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யாவீழ்ந்தபிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள்வெளியேதெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறதுபுள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்டகம்யூனிசத்தால்ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின்சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில்இரண்டுலட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பியநாடுகளிலும்கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காகயாராவதுமன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச்சாமியார்கள்ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள்சுயநலத்துக்காக மக்களைஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம்என்று சக மனிதர்களைக்கொல்லவில்லையே? தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்கவேண்டியஅவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரைநாம்நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம்ஒருஅனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தஊடகங்கள்குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில்நித்தியின்தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியைகுமுதம்சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின்பிரசங்கம்விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியைபிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம்மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும்சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டுகிழிந்தால் இந்தநிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரியதொகைகிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள்வாய்திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான்தமதுகோரைப் பற்களைக் காட்டுவார்கள். மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும்பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றுசொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையேநம்பிக்கையில்தான்ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒருநபரையோ நாம்நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்ததோற்றம்பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான்குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக்கேட்பதற்கெல்லாம்ஒன்றுமே இல்லை. ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில்முகம்தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இதுஎன்றுஇந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன். (இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள்ஷங்கர்போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப்பரவலாகவாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின்பார்வையாளர்தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால்என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும்என்றுநினைக்கிறேன்). ”

3 comments:

அக்பர்-பொள்ளாச்சி. said...

அன்றாடப் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் கூட வெளியிடமுடியாமல், முடங்கிப் போகும் அதிசயத்தை அவ்வப்போது தங்கள் “வலைப்பூ” அம்பலப்படுத்துவது நன்றாகத்தான் உள்ளது.

மேலும் தங்களின் செய்திகளை வாசிக்க சுலபமாக,அதனைப் பத்திகளாகப் பிரித்து எழுதி,பதிவு செய்தால்,பார்வைக்கு நன்றாக இருப்பதோடு,விட்ட இடத்திலிருந்து படிக்கவும் சுலபமாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

அன்புடன் அக்பர்-பொள்ளாச்சி.

Unknown said...

Thanks...

பாரதப்ரியன் said...

Vijay TV always shows it's anti hindu face with amazing force. It's all talk shows trying to crush Hinduism. Innocent peoples of hindu religion are being cheated. Hindu community should wake up from its long sleep. Mr.Ra.Velusamy we the hindu community appreciate this article for unmask the anti hindu terrorism and also forefathers of our sanathan dharma bless you for long and healthy life.
With warm regards,
Bhaarathapriyan.