பொதுவாக மதுபான விற்பனை அது தொடர்பாக "குடிமகன்'களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் போன்ற எந்த செய்தியையும் எழுதுவதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனாலும் இந்த செய்தி வித்யாசமானது என்பதால் பகிர்ந்து கொள்கிறேன். கோவை அவினாசி ரோட்டில் உள்ள பிரபல 3 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 18.05.2010 அன்று இரவு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சச்சின் (கிரிக்கெட் வீரர் இல்லை)உட்பட 4 பேர் தங்கினர். இரவு உணவிற்கு முன்பாக பீர் குடிக்க ஸ்டார் ஓட்டலில் உள்ள "பார்' சென்றனர். 4 பீர் பாட்டில்களை வாங்கினார்கள். அதற்கான பில் ஸ்டார் ஓட்டல் ஊழியர்களால் வழங்கப்பட்டது. பீரைக் குடித்துக் கொண்டிருந்த போது தான் அது காலாவதியானது என்பது பெங்களூர்வாசிகளின் கண்ணில் பட்டது. ஸ்டார் ஓட்டலில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்படுவது இதற்கு முன் அவர்கள் கேள்விப்படாதது. உடனே சில பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்த பெங்களூர்வாசிகள், இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பத்திரிக்கையாளர்கள் வந்துவிட்ட தகவல் தெரிந்ததால் மதுவிலக்குப்பிரிவு ஏசி ரங்காத்தாள் தலைமையிலான போலீசார் அங்குவந்து விசாரணை நடத்தினர். இதற்குள் ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் பறந்தது. வழக்குப்பதிவு செய்யாமலும், செய்தி வெளியாகாமலும் எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று பல தரப்பிலும் முயற்சிகள் நடந்தன. துணைமுதல்வர் ஸ்டாலின் கோவை வரும் போது இந்த ஓட்டலில் தான் தங்குவார் என்பதால் அதையே தங்களுக்கு சாதகமாக்கி கோவையில் உள்ள "அழித்தல்' கடவுள் பெயரைக் கொண்ட போலீஸ் அதிகாரியை நள்ளிரவு நேரத்தில் அணுகினர். அவரும் கருணைக் கண் திறந்தார். அவருக்கு சென்னை டி.வி. அலுவலகங்களில் நெருக்கமான தொடர்பு இருப்பதால் அதைப்பயன்படுத்தி செய்தி வெளியாகாமல் தடுத்து நிறுத்திவிட்டார். போலீசாரும் எப்ஐஆர் ஏதும் பதிவு செய்யவில்லை. ஆனாலும் இந்த வட்டத்திற்கு வெளியே இருந்த பத்திரிக்கையாளர்கள் சிலர் சமார்த்தியமாக இதை செய்தியாக்கிவிட்டனர். சாதாரண மளிகைக்கடைகளில் காலாவதியான பொருட்களை கைப்பற்றியதாக பெருமை அடித்துக் கொள்ளும் அதிகாரிகள், ஸ்டார் ஓட்டல் என்றால் பதுங்கியது ஏன்? ஸ்டார் ஓட்டல்களில் பல மடங்கு பில் வசூலிக்கப்படுகிறது. பீரைப்போலவே மற்ற உணவுப் பொருட்களும் காலாவதியானதாக இருக்க வாய்ப்பில்லை என்று கூற முடியுமா? இதே ஓட்டலில் தங்கும் துணை முதல்வருக்கு கூட இந்த ஓட்டல் நிர்வாகம் காலாவதியான உணவு பொருட்களை சப்ளை செய்துவிடும் வாய்ப்புள்ளதே... என்றெல்லாம் சாமானியர்களுக்கு எழும் கேள்விகள் அதிகாரிகளுக்கு எழாதா என்ன?
என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்!
2 comments:
Arumaiyana seithi...Anaivarukum theriya vendiya seithi...
இது குறித்து பிரபல புலனாய்வு பத்திரிகைகள் கூட வாயடைத்துதான் இருக்கறதோ!
Post a Comment