January 25, 2010

லட்சியத்திற்காக வாழ்பவர்கள்

கோவையில் எழுத்தாளர் ஜெயமோகன் வாசகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில்(23.01.2010) கலந்து கொண்டேன். "தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக நீங்கள் கருதுவது எது?' என்று வாசகர் ஒருவர் கேட்க, எழுத்தாளர் ஜெயமோகன், "தற்போது லட்சியத்திற்காக வாழுபவர்கள் குறைவாக உள்ளனர். லட்சியத்திற்காக ஆயிரம் ரூபாய் நன்கொடை தருவார்கள். ஆனால் அதே லட்சியத்திற்காக நூறு ரூபாய் இழக்க தயாராக இருக்கமாட்டார்கள்...இந்த நிலை தான் மிகப்பெரிய பிரச்சனையாக நினைக்கிறேன்.' என்றார்... எவ்வளவு வித்யாசமான ஆழமான பதில்.

No comments: