June 8, 2012

மீண்டும் பிளாக்கில்.....


அன்பு நண்பர்களே!

வணக்கம்.

எனது பிளாக்கிற்கு அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. நண்பர்கள் பலரும் நான் தற்போது பிளாக்கில் புதிய கட்டுரை ஏதும் எழுதாதது குறித்து கவலையுடன் கேள்வி எழுப்புகின்றனர். பத்திரிக்கையாளனாக நான் சந்தித்து வரும் சுவராஸ்யங்களையே எழுதி வந்தேன். பாரம்பரியம் மிக்க கோவை பிரஸ்கிளப்பின் பொதுச்செயலாளராக 18.09.2011  பொறுப்பேற்ற பின்னர் தற்காலிகமாக பிளாக்கில் எழுதுவதை நிறுத்தியுள்ளேன். ஏன்எனில் நான் எழுதும் கருத்துக்கள் பிரஸ்கிளப்பின் பொதுச்செயலாளர் என்ற முறையில் பார்க்கப்படும் என்பதால்....எனது தனிப்பட்ட கருத்துகூட பிரஸ்கிளப்பின் கருத்தாக கருதப்படும் என்பதால்.... எனது பதவி காலம் வரும் செப்டம்பரில் முடிகிறது. அதற்கு பின்னர் சுதந்திரப்பறவையாக மீண்டும் பிளாக்கில் எனது அனுபவங்களை எழுத துவங்குவேன்.

தோழமையுடன்....ரா.வேலுச்சாமி

1 comment:

தமிழ்மலர் said...

வரவேற்கிறோம்...