March 12, 2011

இது சரிதானா?

கோவை சட்டக்கல்லூரியில் கடந்த சில தினங்களாக 60 மாணவர்கள் பேராசிரியை ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். காரணம்... விடுதியில் தங்கியிருக்கும் மாணவி ஒருவர் முன்னறிவிப்பின்றி வெளியே சென்று விட்டு நள்ளிரவு திரும்பியதாகவும், அவரை அந்த பேராசிரியை கண்டித்ததாகவும் கூறுகின்றனர். எது நடந்ததோ! ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதலில் பேராசிரியையின் அறையில்
அரசியல் தலைவர்களின் படங்களை மாட்டினர். அதற்கு பின்னர் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். பின்னர் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் கொடும்பாவிகளை எரித்தனர். அதன்பின் அரசியல் சட்டப்புத்தகத்தை எரித்தனர்(சட்டமாணவர்கள்), கடைசியாக நேற்று 11.3.2011 அன்று உச்சகட்டமாக இந்திய தேசியக்கொடியை எரித்தனர். அடுத்த கட்டமாக பாகிஸ்தான் கொடியை சட்டக்கல்லூரியில் ஏற்றப்போவதாக அறிவித்துள்ளனர். ஒரு பேராசிரியையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தேசியக் கொடியை எரிப்பதற்கும் என்ன சம்மந்தம்? பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம் என்று கூறுவது எதற்காக? இவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் தானா அல்லது மாணவர்கள் என்ற போர்வையில் உள்ளநபர்களா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. மாணவர்களின் அத்தனை போராட்டங்களும்(!) போலீசாரின் கண்முன்னே நடந்தவை. அவற்றை தடுக்க சிறு துரும்பைக்கூட அவர்கள் கிள்ளிப்போடவில்லை. இதைவிடக்கொடுமை அந்த கல்லூரியின் முதல்வர் இது குறித்து புகார் ஏதும் கொடுக்கவோ, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....
பின்குறிப்பு: இந்த சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருவதால் அந்த கல்லூரியை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்று சுற்றுவட்டார கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

sports4ever said...

இந்த நாயிங்களையும் சேர்த்து கொளுத்திருக்கணும்...போலீஸ்காரங்களை சொல்லி தவறில்லை இவனுங்களை அடிச்சாலே வரிந்து கட்டி கொண்டு வருவானுங்க அரசியல்வாதிங்க....